கவிஞர் அம்பி என அன்போடு அழைக்கப்படும் திரு அம்பிகைபாகர் அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவருடைய நீண்ட நாள் நண்பரும், வானொலி, கல்வியமைச்சு என்பவற்றில் இணைந்து பணியாற்றியவருமான, எமக்கு மிகவும் பரிச்சயமான இரா சத்தியநாதன் மற்றும் ஆஸ்திரேலியாவில் தமிழ் கல்விக்கும் அதன் வளர்ச்சிக்கும் தொடர்ந்து உழைத்து வரும் திரு திருநந்தகுமார் அவர்களின் கருத்துகளோடு, கவிஞர் அம்பி அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.